இலங்கைசெய்திகள்

மின் கட்டணம் உயராது! – அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!!

Gamini Lokuge

             

“தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் இல்லை.”

  • இவ்வாறு மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நாட்டில் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இந்நிலையில் மின்சார கட்டணமும் உயருமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் பொருட்களுக்குச் சிறிதளவு தட்டுப்பாடுகள் உள்ளன. ஆனாலும், வரிசை யுகம் உருவாகவில்லை.

அதேபோல் மின்கட்டணத்தில் எவ்வித மாற்றமும் வராது. பழைய கட்டணமே அறிவிடப்படும்” – என்றார்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button