இலங்கைசெய்திகள்

போதை வியாபாரியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி வீழ்ந்து மரணம் -தம்பலகாமத்தில் சம்பவம்!!

death

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலகாமம் பிரதேசத்தில் போதை வியாபாரி ஒருவரை கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரியொருவர் போதை வியாபாரியை துரத்திச் சென்ற வேளையில் வீழ்ந்து மரணமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இரவு 9.00 மணியளவில் மேற்படி சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் தம்பலகாமம் பொலிஸ்நிலைய பொலிஸ் அதிகாரி தாரிக் (49) என்பவரே மரணமானவராவார்.

தம்பலகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்படி போதைவியாபாரியை கைது செய்வதற்காக துரத்திச் சென்றவேளையில் முள்ளிப் பொதானை என்ற இடத்தில் கைது செய்ய முற்பட்ட வேளையிலே மேற்படி மரண சம்பவம் ஏற்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நபர் கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.அதேவேளை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் பொலிஸாரினால் தடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏ.ஜே.எம்.சாலி

திருகோணமலை

Related Articles

Leave a Reply

Back to top button