இலங்கைசெய்திகள்

சுற்றுலா சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பலி!!

Death

  சுற்றுலா சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மூவர், படகு கவிழ்ந்து, நீரில் மூழ்கி  இறந்த சம்பவம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் வெட்டை கங்காணியார் குளத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 இன்று ஞாயிற்றுக்கிழமை (12-02-2023) இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த விபத்துச் சம்பவத்தில்,  களுவுந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் உட்பட 16 வயதுக்குட்பட்ட த.சஜித்தன்,  ச.தனு, வீ.விதுசன், என்ற மாணவர்களும்  உயிரிழந்துள்ளனர்.

 களுவுந்தன் வெளி அரச தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 3 ஆண் மாணவர்களும் 4 பெண் மாணவிகளும் ஆசிரியர் ஒருவருமாக 8 பேர்கள் ஒன்றிணைந்து தாந்தாமலை பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்று வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button