இலங்கைசெய்திகள்

மன்னாரில் நேற்று கொரோனா உறுதி!!

covid 19

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம், 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 17 நாட்களில், 400 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில், 601 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் மொத்தமாக 3,784 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரையில் 39 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button