இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் விபத்து யாழைச்சேர்ந்தவர் பலி

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச்சேர்ந்த 72 வயதுடைய ரத்னகலாவதி எனபவரே உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கிண்ணியா நோக்கிப் பயணித்த கனரக வாகனமும் கிண்ணியா பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த வான் ஒன்றும் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்ற வான் விபத்துக்குள்ளானதிலேயே குறித்த வயோதிபபெண் உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button