இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!!

Colombo

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களும் இணைந்து கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ராஜபக்சக்களை காப்பாற்றும் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம், ரணிலுக்கு வாக்களித்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் எனவும்  கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க கூடாது, அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என்ற கோஷம் அங்கு வலுப்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button