இலங்கைசெய்திகள்

மீண்டும் கோப் தலைவராக சரித ஹேரத் – கோபாவுக்கு திஸ்ஸ விதாரண!!

Charita Herath

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோப் குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள், பிரதி சபாநாயகரால் கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்தாக கோப் குழுவின் தலைவராக செயற்பட்டுவந்த, பேராசிரியர் சரித ஹேரத், மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குறித்த குழுக்களின் கூட்டங்களின்போது இந்தத் தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button