இலங்கைசெய்திகள்

24 புதிய பேருந்துகள் வடக்கிற்கு!!

Buses

 இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதியில்  இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளன எனவும் 

04 பேரூந்துகள் வவுனியாவிற்கும், 4 பேரூந்துகள் கிளிநொச்சிக்கும், 4 பேரூந்துகள் மன்னாருக்கும் ,3 பேரூந்துகள் முல்லைத்தீவிற்கும், 3 பேரூந்துகள் யாழ்ப்பாணத்திற்கும், 4 பேரூந்துகள் பருத்தித்துறைக்கும், 3 பேரூந்துகள் காரைநகருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 

Related Articles

Leave a Reply

Back to top button