இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ஹெரோயினுடன் இளைஞர் கைது!!

arrested

வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (17) அதிகாலை இடம்பெற்ற கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில்  இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தினை நவகமுவ பகுதியில் இராணுவ புலனாய்வாளர்களினால் சோதனையிடப்பட்டது.
இதன் போது 5கிராம் ஹெரோயின் போதைப்பொருளினை உடமையில் வைத்திருந்த 39 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு ஈரட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை ஈரட்டைப்பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

செய்தியாளர்- கிஷோரன். 

Related Articles

Leave a Reply

Back to top button