இலங்கைசெய்திகள்

கென்ரர் வாகனம் மரத்துடன் மோதியதில் இருவர் படுகாயம்!!

Accident

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் காலம் மேலும் இரு வாரங்களுக்கு நீடிப்பு

வவுனியா பம்பைமடுப்பகுதியில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற கோரவிபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி இரும்பு கேடர்களை ஏற்றிவந்த கென்ரர்வாகனம் பம்பைமடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது வேககட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்ற மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தின்போது வாகனத்தில் பலர் பயணித்திருந்த நிலையில் இருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சிறுகாயமடைந்தனர்.

விபத்து தொடர்பாக பூவசரங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியாளர் – கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button