இலங்கைசமீபத்திய செய்திகள்

ஹெரோயினை ஊசி மூலம் ஏற்றிக்கொண்டிருந்த நால்வரை அலேக்காக தூக்கிய குற்றத்தடுப்பு பிரிவினர்

ஊசி மூலம் போதைப் பொருளை எடுத்துக் கொண்டிருந்த நால்வர் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் அரசடிப்பகுதியில், ஊசி மூலம்ஹெரோயின் ஏற்றிக்கொண்டிருந்த நால்வர் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் ஏழுதுமட்டுவாழ் பகுதியிலேயே போதைப்பொருளை பெற்றுக்கொண்டதாக குற்றவாளிகள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button