இலங்கைசமீபத்திய செய்திகள்

310 இலங்கையர்களுடன் கனடா சென்ற கப்பல் கடலில் மூழ்கும் அபாயம்

310 இலங்கையர்களை கனடாக்கு ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ்  மற்றும் வியாட்நாமுக்கு இடையே மூழ்கிக் கொண்டிருப்பதாக குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து கப்பலில் தத்தளித்து கொண்டிருக்கும் 310 இலங்கையர்களையும் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இந்த  விடயம் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தைகள் பெண்கள் சுமார் 40 பேர் உள்ளதாகவும் மொத்தமாக 310 பேர் உள்ளதாகவும் அனைவரும் இலங்கையர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 310 பேரையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிலிப்பைன்ஸ் கடற்படையுடன் தொடர்புகொள்ளப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் பயமின்றி இருக்குமாறு குறித்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்கள் விரைவில் இணைக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Back to top button