கவிதைமுத்தமிழ் அரங்கம்.

நீயும் நானும் – கவிதை!!

poem

செங்கொன்றையாய் நீ
பூத்திருக்கிறாய்
எதிர்த்திசையில்

உன் நளினங்கள் தான்
எத்தனை விதம்?
காற்று உன் இதழ் தொட்டு
உதிர்க்கும் அந்த தீண்டல்
ஆகர்சிக்கிறது என்னுள்ளே.

உன்னை ரசிக்கவேண்டும் நான்.
உனக்காக திரும்பிக் கொள்கின்றேன்.
நீ யாதுமாய் நிறைந்திருக்கிறாய்
என்னுள்ளே!

கோபிகை

Related Articles

Leave a Reply

Back to top button