கவிதைமுத்தமிழ் அரங்கம்.

விதவை – கவிதை!!

Widow

மழைக்கால பொழுதுகள்
மாதவம் செய்துகொண்டிருக்கிறது
சூரியக் குளியலுக்காய்…

நீரோடும் வீதிகளில்
மண்டுகங்கள்
மயங்கி கிடக்கிறது.

வானப்பூக்கள்
வைகறை குளியலுக்குள்
ஒளிந்து நிற்கிறது.

அல்லியும் முல்லையும்
ஆனந்தச் சிரிப்பில்
அழகு சொரிகிறது…

பூவுக்குள் எல்லாம்
பூவையின் வெட்கம்
பூத்திருக்கிறது.

தீண்டாமை நேசங்களும்
இதம் கேட்டு
நகர்கிறது…

அவளுக்கு மட்டும்
அனல் தெறிக்கிறது
உடலிலும் உள்ளத்திலும்…

கோபிகை

Related Articles

Leave a Reply

Back to top button