இலங்கைசெய்திகள்

ஐவின்ஸ் தமிழின் பிரதான அனுசரனையில் மட்டுவில் தெற்கு வளர்மதி ச னசமூக நிலையத்தின் மாதர் அபிவிருத்திச் சங்க மகளிர் தின நிகழ்வு 2023!

Women's day

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வு 12. 03.. 2023 எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணிக்கு வளர்மதி விளையாட்டு அரங்க மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

வளர்மதி மாதர் அபிவிருத்திச் சங்கத் தலைவி திருமதி. டர்சிகா  அமல்ராஜ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில்,  பெண்கள் உரிமைச் செயற்பட்டார்  லயன்  சீமாட்டி திருமதி நிர்மலா மகேந்திரன் முதன்மை விருந்தினராகவும் முன்னாள் வளர்மதி முன்பள்ளி சிரேஷ்ட ஆசிரியர் திருமதி. தவமணி இராசலிங்கம் சிறப்பு விருந்தினராகவும்  சுவிஸ் வாழ். வளர்மதி அங்கத்தவர் திருமதி.  றெஜினா செல்வராசா, சாவகச்சேரி வைத்தியசாலைப் பரிசாரகர் திருமதி. உமாகௌரி சோமசுந்தரம் மற்றும்   சாவகச்சேரி வைத்தியசாலை பரிசாரகர்  திருமதி.  ஜெயந்தி சசிகுமார் ஆகியோர் கௌரவ  விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம்,  கொடியேற்றல், வரவேற்புரை, தலைமை உரை, விளையாட்டு நிகழ்வுகள் போன்றவற்றைத் தொடர்ந்து விருந்தினர் உரைகளும் இடம்பெற்று நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற உள்ளது. 

இந்த சமூக நிகழ்வுக்கு இளம் வயதில் மறைந்த சந்திரகுமார் பிரணவன் ஞாபகாரத்தமாக அவரது உறவினர் கனடாவைச்சே்ர்ந்த சமூக ஆர்வலர் சு. செந்தூரன் ஐவின்ஸ் தமிழுடன் அணுசரணையாளராக இணைகின்றார். .இந்த நிகழவுக்கான முழுமையான ஊடக அனுசரணையையும் ஐவின்ஸ் தமிழ் வழங்குவது குறிப்பிடத்தக்கது,

நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினர் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button