இலங்கைசெய்திகள்

தேவாலயம் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் படுகாயம்!!

The church collapsed

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த இளம் குடும்பம் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்க்காகச் சென்று அங்கு தங்கியிருந்து வழிபாட்டில் ஈடுபட்ட வேளையிலேயே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

கட்டைக்காட்டை சேர்ந்த இளைஞன் வினோத் என்பவர் படுகாயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி பொது வைத்திய சாலைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளார்.

அவரது மனைவியும் அங்கிருந்த போதும் அவர் தெய்வாதீனமாக தப்பித்துக் கொண்டார்.

அவர்களது மோட்டார் சைக்கிளும் பலத்த சேதம் அடைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button