இலங்கைசெய்திகள்

தந்தையும், மகளும் தற்கொலை – ஏராவூரில் நடந்தது என்ன!!

Suicide

Woman lying on a bed holding an open bottle of pills

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில், நேற்று மாலை, 17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, இன்று காலை சிறுமியின் தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

களுவங்கேணி முதலாம் பிரிவு அக்கரைவீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷ்கா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் ஆகிய இருவருமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துவருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில் சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்பவதினமான நேற்று மாலை வீட்டில் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமி தற்கொலைக்கு காரணம் சிறுமியின் தந்தை தான் என அயலவர்கள் பேசத்தொடங்கியதையடுத்து சிறுமியின் தந்தை இன்று காலையில் வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டுவருவதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button