இலங்கைசெய்திகள்

புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் அரங்க கதையாடல்!!

storytelling

புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் மெய்நிகர் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல் தொடர் 14 நிகழ்வு பங்குனி மாதம் 20,21,22,23,24 ஆகிய திகதிகளில் இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இந் நிகழ்வில்
20.03.2022 ஞாயிற்றுக்கிழமை முனைவர் வெ.முத்துலட்சுமி (இந்தியா) – உலகம் போற்றும் சிலம்பில் நாடகக் கூறுகள்
21.03.2022 திங்கட்கிழமை க.பத்திநாதன் (இலங்கை) வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கலும் அதன் மானுடவியல் பார்வையும்
22.03.2022 செவ்வாய்க்கிழமை சுவிஸ் ரகு (சுவிஸ்) நம்மவர்கள் திரைத்துறையில் சாதிப்பதற்கான வழிமுறைகள்
23.032022 புதன்கிழமை பேராசிரியர் ந.இளங்கோ (இந்தியா) சேக்ஸ்பியரின் நாடகங்களும் பபூன் பாத்திரங்களும்
24.032022 வியாழக்கிழமை கலாநிதி பா.தனபாலன் (இலங்கை) அரங்கத்திறன்களை விருத்தியாக்குவதனூடாக ஆசிரியர்களின் ஆளுமையை வலுவூட்டல்

ஆகிய விடயங்களில் கதையாடவுள்ளார் .

நிறைவுரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்கள்.

இவ் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 647334 8261கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button