இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பதிவாளர் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

Srilanka

 இலங்கையில்,  பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ‘ ஆவணங்கள் 6 மாதங்களுக்கு மட்டுமே  செல்லுபடியாகும்”  என்ற முந்தைய விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வழங்கப்பட்ட எந்தவொரு சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல் இருந்தால் வேறு புதிய நகலைப் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் திணைக்களம் தெரிவிக்கிறது.

Related Articles

Leave a Reply

Back to top button