இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சிறுவர்கள் தொடர்பில் இலங்கையில் வெளியான தகவல்!!

Srilanka

 இலங்கையில் தொழுநோயாளர்கள் தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

 இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாகவும் தொழுநோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வௌ்ளை அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை அவர்கள் நோயாக கருதி செயற்படுவதில்லை எனவும் வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் (29-01-2023) உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button