செய்திகள்தொழில்நுட்பம்முக்கிய செய்திகள்

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பாரிய தடை!!

Social media

இலங்கை இராணுவத்தினரின் இரகசியத் தகவல்கள், அவதூறு, ஆபாசமான, பாலியல், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடுவதற்கு இராணுவத் தலைமையகம் தடை விதித்துள்ளது.

அதன்படி இராணுவத் தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எல்.டி. ஹெராத் பிறப்பித்த உத்தரவின் மூலம் அனைத்து இராணுவ அதிகாரிகள் மற்றும் பிற பதவிகளுக்கு செயற்படும் அதிகாரிகளுக்கும் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன மற்றும் மத நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்கும் தகவல்கள், எந்தவொரு நபர் அல்லது அமைப்பு பற்றிய அவதூறான அறிக்கைகள் மற்றும் நாட்டின் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு தகவலையும் பரிமாறிக்கொள்ளவும்  தடைசெய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button