செய்திகள்புலச்செய்திகள்

லண்டனில் கடும் பனிப்பொழிவு – விமான நிலையத்திற்குப் பூட்டு!!

Snow

கடும் பனிப்பொழிவை தொடர்ந்து லண்டன் ஸ்டான் ஸ்டெட் விமான நிலையத்தின் ஒற்றை ஓடுபாதையும் மூடப்பட்டதால், அங்கு அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ஹீத்ரோ விமான நிலையத்தில், கடும் பனி மூட்டத்தால் விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு, 50 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

பனிப்பொழிவால் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான விபத்துகள் நேர்ந்துள்ளன.

பிர்மிங்ஹாம் நகரம் அருகே, உறைந்துபோன ஏரியில் விளையாடியபோது, ஐஸ் உடைந்து தண்ணீருக்குள் விழுந்த 4 குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button