Breaking Newsஇலங்கைசெய்திகள்

நாளை (15) பாடசாலைகள் நடைபெற மாட்டாது!!

Schools closed

 நாட்டில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்மிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

மேல் மற்றும் சப்ரகாமுவா மாகாணங்களில் நாளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த தவணை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால், *நாளைய தினம்(15) கல்வி நடவடிக்கைகள்  பாடசாலைகள் நடைபெற மாட்டாது* என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமாக இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

இதில் நீர்வழங்கல், மின்சார விநியோகம், வைத்திய துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button