இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

Schools

 தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களைப் பாடசாலைகளில்  சேர்த்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், கிடைக்கக்கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு பாடசாலைகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு இனி வழங்காது எனவும் 6 ஆம் வகுப்புக்கு இது பொருந்தாது என்றும் அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button