இலங்கைசெய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் மோதல்- கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் பலி!!

merder

நேற்று இரவு நிட்டம்புவ – ஹொரகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த குறித்த இளைஞருக்கும், அங்கிருந்த ஓட்டோ சாரதியொருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூரிய ஆயுதமொன்றினால் இளைஞர் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞர், வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கொழும்பு 14 ஐ சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

ஓட்டோ சாரதி தலைமறைவாகி உள்ள நிலையில், அவரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button