செய்திகள்விளையாட்டு

அமரர் இ. சுதாகரன் ஞாபகார்த்த வெற்றி கிண்ணம் 2022 போட்டிகள்!!

Matches

அமரர் இ. சுதாகரன் ஞாபகார்த்தமாக வருடாந்தம் நடாத்தப்படும் “இ. சுதாகரன் வெற்றி கிண்ணம் 2022 ” ம் ஆண்டுக்கான இறுதிப் போட்டியானது 22. 05.2022 நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு கழகத் தலைவர் திரு யே. லக்சிதரன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அதே கிராமத்தைச் சேர்ந்த சாதனைப்பெண்மணி செல்வி செ. டயானா அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுடன் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது

இந்நிகழ்வில் , கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ திரு. ராசன் அண்ணா மற்றும் இளைஞர் சேவைகள் மன்ற ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு. ரதிசன், முல்லைத்தீவு மாவட்ட கடினப்பந்து பயிற்சிவிப்பாளர் திரு. செல்வா மற்றும் பொது அமைப்பினர் நலன்விரும்பிகள், கிராமமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

கரப்பந்தாட்டப் போட்டியில்
இந்துபுரம் பீனிக்ஸ் இளைஞர் கழகம் இரண்டாம் நிலையும்
சாந்தபுரம் கலைமகள் விளையாட்டுக் கழகம் முதல்நிலையும் பெற்றனர்.

உதைபந்தாட்ட போட்டியில்
இந்துபுரம் இளந்துளிர் விளையாட்டுக் கழகம் இரண்டாம் நிலையும்
சாந்தபுரம் கலைமகள் விளையாட்டுக் கழகம் முதல் நிலையும் பெற்றனர்

கிரிக்கெட் போட்டி
சாந்தபுரம் கலைமகள் விளையாட்டு கழகம் இரண்டாம் நிலையும் இந்துபுரம் பீனிக்ஸ் இளைஞர் கழகம் முதல் நிலையும் பெற்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button