இலங்கைசெய்திகள்

ஓய்வுக் காலத்தை அறிவித்தார் மகிந்த!!

Mahintha

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த மகிந்த ராஜபக்ஷ தனது காலம் வரை பதவி வகிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மகிந்த இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பல பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன். அடுத்த தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி.

தற்போதைய நெருக்கடியான பொருளாதாரம், மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் அரசாங்கம் விரைவில் தீர்க்கும் எனவும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button