இலங்கைசெய்திகள்

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும்!!

Madduvil south

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும்  05.03.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாலை 3.30 மணியளவில் நிலைய அரங்கில் சனசமூக நிலைய தலைவர்  திரு.க. திவாகர் தலைமையில்  ஆரம்பமான இந்த நிகழ்வில்  இறைவணக்கம் ,  தலைமை உரை , சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் உரை, செயலாளர் ஆண்டறிக்கை, பொருளாளர் கணக்கறிக்கை என்பவற்றைத் தொடர்ந்து புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது.

சின்னத்துரை தனுசன் தலைவராகவும் கு. லக்மணசிறி செயலாளராகவும் சி. மதியழகன்  பொருளாளயாகவும் உபதலைவயாக முன்னாள் தலைவர் க. திவாகர் உபதலைவராகவும் சு. சஞ்சீவன் உபசெயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் கிராம சமூக  முன்னேற்ற அபிவிருத்தி   சார்ந்த விடயங்கள் தொடர்பான தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டதாக அறியமுடிகிறது.

புதிய நிர்வாக சபை சிறப்பாக மிளிர ஐவின்ஸ் தமிழும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.








Related Articles

Leave a Reply

Back to top button