இலங்கைசெய்திகள்

யாழ். நகரில் நடமாடும் கஞ்சா வியாபாரி சிக்கினார்!

யாழ். நகரில் நடமாடி கஞ்சாப் பொதிகளை விற்பனை செய்த நபரைப் பொலிஸார் கைதுசெய்தனர்.

கஞ்சாவை சிறிய சிறிய பொதிகளாகப் பொதி செய்து நபர் ஒருவர் யாழ். நகரில் நடமாடி விற்பனை செய்து வருகின்றார் என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் பொலிஸார் சந்தேகநபரைக் கைதுசெய்ததுடன், கஞ்சா பைக்கற்றுக்களையும் மீட்டனர்.

சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button