உலகம்செய்திகள்

துப்பாக்கியுடன் புகுந்த நபரை சுட்டுக் கொன்ற அதிகாரிகள்!!

Gun

அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI அலுவலகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த நபரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

ஓஹியோவில் உள்ள FBI அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பை மீறி கையில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் புகுந்ததால் நீண்ட நேரமாக அங்கு பதற்றம் நிலவியது. பின்னர் அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புளோரிடாவில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் வீட்டை FBI அதிகாரிகள் சோதனையிட்டதால் அவர்களைக் கொல்லப் போவதாக அந்த நபர் சமூக ஊடகத்தில் மிரட்டல் விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button