இலங்கைசெய்திகள்

யாழில் ஆசிரியர் ஒருவர் தீயில் எரிந்து பலி!!

Fire accident

எரிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் தாயாரின் வீட்டில் தங்கியிருந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஓய்வுபெற்ற ஆசிரியரான 41 வயதான பிரபாகரன் பிறேமலதா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர்.

திருமணம் முடித்து யாழ் நகரை அண்மித்த பகுதியில் குடியிருந்த இவர்

அண்மைக்காலமாக தீவிரமாக நோய்வாய்ப்பட்டு, தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த இவர் ஆசிரியர் பணியிலிருந்தும் ஓய்வுபெற்றுள்ளார். சுகவீனமுற்ற நிலையில் தாயார் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இவ்வாறு தீயில் எரிந்துள்ளார்.

அறையில் பெற்றோலும் இருந்த நிலையில் இது தற்கொலையா விபத்தா என்பது தொடர்பில் மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button