Breaking Newsஇலங்கைசெய்திகள்

மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!!

Electricity

 நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனவே நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது மாலை 06:00 மணி முதல் 08:00 மணி வரை தினசரி மின்சாரத் தேவை அதிகமாக உள்ளதாகவும்  அந்த நேரத்தில்  அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் தடைகளைக் குறைத்து மின்சாரத்தை வழங்க முடியும் எனவும்  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button