இலங்கைசெய்திகள்

மாணவி சடலமாக மீட்பு – சகோதரியின் கணவர் கைது!!

death

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவில் சொந்த வீட்டில் 16 வயது மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சந்தேகத்தின் பெயரில் சகோதரியின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி மாணவியின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தாயார் அரபு நாடொன்றில் பணிக்குச் சென்றுள்ளார். இரண்டு பெண்பிள்ளைகள் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இரண்டாவது சகோதரியுடன் வாழ்ந்து வந்த மூன்றாவது பெண் பிள்ளையான 18 வயதுடைய யோகராசா திரிஷா என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

மூத்த சகோதரியின் வீட்டிற்குச் செல்வதாக கூறி மனைவியை அழைத்துச் சென்ற சந்தேக நபர், தொழிலுக்குச் செல்வதாக கூறி திரும்பி வந்தபோது தன்னையும் மூத்த சகோதரியின் வீட்டில் விடுமாறு கேட்ட குறித்த பெண்ணை அழைத்துச் சென்ற சகோதரியின் கணவன், சற்று நேரத்தில் சடலமாக எடுத்துவந்து, சடலத்திலிருந்த இரத்தக்கறைகள் தெரியாதவாறு ஆடை மாற்றிவிட்டு, படுக்கையில் கிடத்திவிட்டுச் சென்றுள்ளார்.

வீடு வந்த சகோதரி தங்கை உறங்குவதாக நினைத்து மறுநாள் வரை பார்க்காது விட்டுள்ளார். நேரம் சென்ற போது சந்தேகம் வந்து பார்த்த சகோதரிக்கு, தங்கையின் நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைத்தியசாலை கொண்டு சென்ற போதே பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மேலதிக விசாரணையின் போதே சகோதரியின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என ஊர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கைதானவர் பெண்கள் விடயத்தில் மிக மோசமான ஒருவர் எனவும் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டவர் எனவும் அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.

தகவல் – மதுவிழி

Related Articles

Leave a Reply

Back to top button