இலங்கைசெய்திகள்

சிலாபம் கடலில் மூழ்கி இருவர் பலி!!

death

சிலாபம், மெதவத்த கடற்கரையில் விருந்தின் போது நீராடச் சென்ற 9 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் குறித்த குழுவை மீட்டு ஒருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் நானுஓயாவைச் சேர்ந்த மருதை ராமசாமி மற்றும் நான்கு பிள்ளைகளின் தந்தையான விஷ்வனாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தும்மலசூரிய கைத்தொழில் பேட்டையில் இருந்து குறித்த குழுவினர் இந்த பகுதிக்கு வந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button