இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்முக்கிய செய்திகள்

கொரோனாத் தொற்றால் ஒரே நாளில் 36 பேர் மரணம்!

இலங்கையில் மேலும் 36 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று இவ்வாறு மரணமடைந்த 36 பேரில் 27 பேர் ஆண்களும், 9 பேர் பெண்களும் அடங்குகின்றனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 25 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button