இலங்கைசெய்திகள்

மேலும் 1,297 பேருக்குக் கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 1,297 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 24 ஆயிரத்து 545ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 14 ஆயிரத்து 847 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 373 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 93 ஆயிரத்து 975 ஆக உயர்வடைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button