இலங்கைசெய்திகள்

சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு!!

Congratulations to the student

மட்.நாவற்காடு கிராமத்தினை சேர்ந்த ம.மமே.நாவற்காடு நாமகள் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கற்கின்ற மாணவி சுரேஸ் மயூரா அவர்கள் கிழக்கு மாகாண மட்டத்தில் குண்டு போடுதலில் முதலாம் இடமும், பருதி வட்டம் வீசுதலில் மூன்றாம் இடத்தினையும் பெற்று, இளைஞர் கழக ரீதியில் தேசிய மட்டத்தில் நான்காம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும், கிராமத்திற்கும், பிரதேசத்திற்கும் புகழை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இந்த சாதனையை நிலைநாட்டிய மாணவி சுரேஸ் மயூரா, மற்றும் அவரை நெறிப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் சுபாஸ், பயிற்றுவிப்பாளர் ஆகியோர், அக்னிச் சிறகுகள் பேரவையின் ஆரம்பகால உறுப்பினர் ச.விஜேந்திரன் நிதி அனுசரணையில் வியாழக்கிழமை(13) ம.ம.மே.நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் அக்னிச் சிறகுகள் பேரவையால் பாராட்டி வாழ்த்தி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பாடசாலையின் முதல்வார் இ.தியாகரெத்தினம், உப அதிபர், க,திருச்செல்வம், ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் அக்னிச் சிறகுகள் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, ஆலோசகர் மு.ரெத்தினதுரை ஆகியோரால் கௌரவிப்பு செய்யப்பட்டது.

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button