இலங்கைசெய்திகள்

அமரத்துவம் அடைந்த கொழும்பு தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் நினைவுப் பகிர்தல்!!

Colombo Tamil Society

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்து அமரத்துவம் அடைந்தவர்களின் நினைவுப் பகிர்தல் நடைபெற்றது.

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் தி.ஞானசேகரன் தலைமையில், தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்று மாலை இந்த நிகழ்வு நடைபெற்றது.

கபிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் அமரர் ஆர்.ராஜமகேந்திரன், அமரர் வ.சிவச்சந்திரதேவன், அமரர் க.க.உதயகுமார், அமரர் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, அமரர் அ.இராமலிங்கம், அமரர் பத்மா சோமகாந்தன், அமரர் ஜெ.திருச்சந்திரன், அமரர் கலாநிதி மரியசேவியர் அடிகளார், அமரர் அரியகுட்டி நடராசா, அமரர் வைத்தீஸ்வரன் சிவசோதி, அமரர் சைவப்புலவர் சு.செல்லத்துரை, அமரர் பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் ஆகியோர் நினைவுகூரப்பட்டனர்.

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்து அமரத்துவம் அடைந்த இவர்களின் உருவப்படங்களுக்கு இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.

செய்தியாளர் சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button