செய்திகள்பொருளாதார செய்திகள்முக்கிய செய்திகள்

நாளை ஒரு இலட்சம் மில்லியன் பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகம்!!

central bank of srilanka

ஒரு இலட்சம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் வழங்கல், நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மூன்று பிரிவுகளின் அடிப்படையில், இதற்கான ஏலம் இடம்பெறவுள்ளது.

2025 ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியை முதிர்வுக் காலமாகக் கொண்ட முறிகளின் பெறுமதி 25, 000மில்லியன் ரூபாவாகும்.

அத்துடன், மேலும் 25, 000மில்லியன் ரூபா பெறுமதியான முறிகள், 2027 ஜுன் மாதம் 15 திகதி முதிர்வுக் காலத்தைக் கொண்டுள்ளன.

அதேநேரம், 2033 ஜனவரி 15 ஆம் திகதியை முதிர்வுக் காலமாகக் கொண்ட 50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான முறிகளும் ஏலமிடப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button