இலங்கைசெய்திகள்

பேருந்தில் பெண்ணுக்கு நடந்த அவலம்!!

bus

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் இளம் பெண்ணொருவரை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து இளைஞனை சக பயணிகள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பேருந்தில் சன நெரிசலில் இளைஞன் தனக்கு முன்னால் நின்ற யுவதியை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

காயத்திற்கு உள்ளான யுவதி சத்தமிடவே சக பயணிகள் சுதாகரித்து பிளேட்டினால் வெட்டிய இளைஞனை பேருந்தினுள் மடக்கி பிடித்தனர்.

குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பொலிஸ் காவலரணில் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவரவில்லை.

Related Articles

Leave a Reply

Back to top button