செய்திகள்மண்வாசனை

பிரபா அன்புவின் இரு நூல்கள் வெளியீட்டு விழா!!

Book launch

ஈழத்து எழுத்தாளர் பிரபாஅன்பு அவர்களின் நூல்களான அலைபாடும் துயரோசை,கரிசல் நிலத்துக் கீறல்கள் ஆகிய இரு நூல்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 17 மற்றும் 21 ஆகிய தினங்களில் சென்னையில் நடைபெற்ற 46வது புத்தகக் கண்காட்சியில் மாலை 6-00 மணியளவில் இந்த நூல்களும் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

கவிதை நூலினை  முனைவர் சக்தி ஜோதி அவர்கள் வெளியிட சினிமா எழுத்தாளர் திரு.தொல்காப்பியன் அவர்கள்  பெற்றுக்கொண்டார்.

சிறுகதை நூலினை எழிலினி பதிப்பக உரிமையாளர் திரு . ஒளிவண்ணன் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.

இவ் வெளியீட்டு நிகழ்வில் கவிஞர்கள்,வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எனப்பலரும் பங்குபற்றியிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button