செய்திகள்புலச்செய்திகள்

தமிழினப் படுகொலை நாளை முன்னிட்டு கத்தாரில் இரத்ததான முகாம்!!

Blood donation

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 13ம் ஆண்டு நினைவாக, தோகா , கட்டார் தமிழர் கலை அறிவியியல் பேரவையின் ஏற்பாட்டில் மே மாதம் 18 ம் திகதி மாலை 8.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வும் மே மாதம் 25 ம் திகதி மாலை 3.00 மணிக்கு இரத்ததான முகாம் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம், சனையா 38, கத்தார் என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

மே18 நினைவெழுச்சி நாள் வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டில் உணர்வெழுச்சியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதுடன்
“ஒற்றுமையாய் ஒன்றுபடுவோம் தமிழ் இனமாக” எனவும் ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button