இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ஹெரோயினுடன் இரு தம்பதியினர் கைது!!

arrested

வாடகை வாகனம் ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்துடன் பயணித்த வவுனியா மற்றும் சாகவச்சேரி பகுதிகளில் வசித்து வரும் கணவன் மனைவி என இரு தம்பதிகளான நான்குபேரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர் .
 வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை வாடகை வாகனம் ஒன்றில் வவுனியா நோக்கி வந்த மோட்டார் கார் ஒன்றினை வழிமறித்து சோதனை மேற்கொண்ட பொலிசார் அங்கிருந்து 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருட்களை மீட்டுள்ளனர் . ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற குற்றத்திற்காக மதகுவைத்துகுளம் மற்றும் சாவகச்சேரியில் வசித்து வரும் இரு தம்பதியினரைக் கைது செய்த பொலிசார் அவர்கள் பயணித்த வாடகை வாகனத்தை தடுத்துவைத்து அவர்களிடம் மேலதிக விசாரணகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவித்துள்ளனர் .
செய்தியாளர் கிஷோரன் 

Related Articles

Leave a Reply

Back to top button