இலங்கைசெய்திகள்

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!!

Accident

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் புகையிரதக்கடவை பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாகவும், இதன்காரணமாக அப்பகுதியில் அடிக்கடி புகையிரத விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்ட அப்பகுதி மக்கள் தமக்கு பாதுகாப்பான புகையிரதக் கடவையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button