இலங்கைசெய்திகள்

நாட்டை ஆட்சிசெய்ய அரசாங்கத்திற்கு தெரியாது சஜித் சாட்டையடி

“நாட்டை எப்படி ஆள்வது எனத் தற்போதைய ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கொரோனாவைக் காரணம் காட்டுகின்றனர்.” – என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“நெருக்கடியான காலகட்டத்தில்கூட கொள்ளையடிப்புகள் நிறுத்தப்படவில்லை. வெள்ளைப்பூடு முதல் சீனி வரை அனைத்து விடயங்களிலும் மோசடிகள் அரங்கேறியுள்ளன. எனினும், கொரோனாவைக் காட்டி அனுதாபம் திரட்டுவதற்கு ஆளுங்கட்சியினர் முற்படுகின்றனர். தமது இயலாமையை மூடிமறைக்கப் பலதும் செய்கின்றனர்.

எனவே, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும். அதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். சம்பளம் உட்பட எந்தவொரு வரப்பிரதாசங்களையும் வாங்காமல் சிறந்த வழிகாட்டலை வழங்குவேன்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button