சினிமாசெய்திகள்

சூர்யாவின் அடுத்த படத்தில் அனிருத்தின் தூக்கலான பாடல்!!

Anirudh's song

சூர்யா நடிப்பில்இ பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ராக்ஸ்டார் அனிருத் ஒரு பாடலை பாடி உள்ளதாகவும் இமான் கம்போஸ் செய்த இந்த பாடல் வேற லெவலில் இருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு பாடலைப் பாடி உள்ள நிலையில் தற்போது அனிருத்தும் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா, பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.

Related Articles

Leave a Reply

Back to top button