இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் துயரம்
டிப்பர் வாகனம் மோதி 18 வயது இளைஞன் பலி மற்றொருவர் படுகாயம்

டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் இன்று (10) இடம்பெற்றுள்ளது.

இக்கோர விபத்தில் இளவாலை உயரப்புலத்தைச் சேர்ந்த சசிக்குமார் லிசான் (வயது 18) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதிலேயே இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திலேயே மோட்டார்சைக்கிளை செலுத்தி வந்த 18 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். அத்துடன் அவருடன் வந்த மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் தெள்ளிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிப்பர் வாகன சாரதி காங்கேசன்துறை பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button