இலங்கைசெய்திகள்

டிக்டொக் காதலால் வீட்டை விட்டுச் சென்ற 12 வயதுச் சிறுமி!!

12 year old girl

சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மூங்கிலாற்று பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 4ஆம் திகதி இரவு நித்திரை கொள்ளச் சென்ற சிறுமி அதிகாலையில் வீட்டில் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டில் இருந்த பணம், தந்தையின் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ள நிலையில் “தன்னைத் தேடவேண்டாம்” என கடிதம் எழுதிவைத்து விட்டு சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். குறித்த சிறுமி, டிக்டொக் மூலம் ஹட்டன் பகுதியினைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்துள்ளதாகவும், காதலனைத் தேடி சென்றிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம் இதுவரை சிறுமியின் தொடர்பு ஒருதடவை கிடைத்துள்ளதாகவும், மேற்கொண்டு தொடர்பு கிடைக்கவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button