இலங்கைசமீபத்திய செய்திகள்

மட்டக்களப்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி சித்திவிநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுகட்சியின் உபதலைவருமான பொன்.செல்வராசா தலைமையில் இவ் நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மெளன வணக்கம் செலுத்தப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சியும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் வாதிகள், மதகுருமார்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button