இலங்கைசமீபத்திய செய்திகள்

உரும்பிராய் – செல்வபுரம் பகுதியில் வீட்டில் கசிப்பு காய்ச்சிய நபரை குண்டோடு அள்ளிய பொலிஸார்

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் செல்வபுரம் பகுதியில் வீடொன்றில் வைத்து கசிப்பு காய்ச்சிய குடும்பஸ்தர் (வயது 34) ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீட்டின் சமயலறையில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 15 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் குற்றத்தடுப்பு பொலிஸரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப் படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button